நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு சர்வாதிகார போக்கே காணப்படுகின்றது: என்.வி. சுப்பிரமணியம்

M K Stalin Eastern Province
By Kajinthan Apr 09, 2023 08:33 PM GMT
Report

''நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் சர்வாதிகார போக்கே காணப்படுவதாகவும்'' அகில இலங்கை தொழிலாளர் சம்மேளன கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (09.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இனவாத நிகழ்ச்சி நிரல்

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு சர்வாதிகார போக்கே காணப்படுகின்றது: என்.வி. சுப்பிரமணியம் | There Is An Authoritarian Tendency In The Country

''தற்போது இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளானது அரசின் சர்வாதிகாரம் வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழர்கள் காலங்காலமாக சிங்கள இனவெறி பிடித்த அரசுகளால் அடக்கியொடுக்கப்பட்டுள்ளோம்.

ஆரம்ப காலந்தொட்டு இனவாத நிகழ்ச்சி நிரலில் நாடு செயற்பட்டு தமிழர்களின் அடையாளங்கள், கலாசாரங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன் குருந்தூர்மலையை தொல்லியற் திணைக்களம் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட போது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையிலுள்ள போதும் விகாரையை கட்டி முடித்துள்ளனர்.

இதேவேளை கின்னியாவிலும் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருக்கும் வேளையில் அங்கு பாதையோரங்களில் திட்டமிட்டு சிங்கள நடைபாதை வியாபாரங்களுக்கு அனுமதியளித்துள்ளனர்.

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு சர்வாதிகார போக்கே காணப்படுகின்றது: என்.வி. சுப்பிரமணியம் | There Is An Authoritarian Tendency In The Country

சில தினங்களுக்கு முன் திருக்கடலூரில் பாதுகாப்பு படையினரின் மறைமுக உந்தலில் தமிழர்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தி சுதந்திரத்திற்கு அச்சம் ஏற்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் ஒடுக்குமுறை

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நெல் வயலிலே திட்டமிடப்பட்டு 30க்கு மேற்பட்ட மூட்டைகள் பெரும்பான்மையினரால் அபகரித்துச் செல்லப்பட்டன. ஆனால் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த விடயங்களை கையிலெடுத்து கண்டனங்களைத் தெரிவித்தால் அது அரசிற்கு முட்டுகட்டையாக இருக்கும். அதனை தடுக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் எமது குரல்களை ஒடுக்க முயல்கின்றனர்.

இந்த சட்டத்தை ஜனநாயக நாட்டிலே ஜனநாயகத்திற்கு முரணாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சட்டத்தை அனைத்து தரப்பும் எதிர்க்க வேண்டும் என்பதுடன் அரச தலைவரும் இதை குறித்து மீள்பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு சர்வாதிகார போக்கே காணப்படுகின்றது: என்.வி. சுப்பிரமணியம் | There Is An Authoritarian Tendency In The Country

எமக்கு பல கட்சிகள், பல தலைவர்கள் இருந்தாலும். அவர்கள் பல்வேறு தரப்பாக பிரிந்துள்ளனர். தமிழர்களுக்கு இறுதியாக உள்ள ஆயுதம் ஒற்றுமை மட்டுமே. தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தலைவர்கள் மண்ணிலும் மக்களிலும் கருணை கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடற்தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்

சில தினங்ளுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கு கச்சத்தீவை மீளப்பெற வேண்டுமென அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஊடகவியளாளர்கள் வினவிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,

ஸ்டாலின் இளம் தலைவராக காணப்படுவதால் பழைய வரலாறுகள் பற்றி தெரியாது.

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு சர்வாதிகார போக்கே காணப்படுகின்றது: என்.வி. சுப்பிரமணியம் | There Is An Authoritarian Tendency In The Country

1974 இல் இலங்கை - இந்திய பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கும் இலங்கையிலுள்ள தமிழர்களுக்குமிடையிலான நல்லிணக்க உறவை திட்டமிட்டு தடுக்கும் நோக்கிலே இந்திரா காந்தியால் இலங்கைக்கு தன்நலம் கருதி குறித்த பேச்சுவார்த்தை விட்டுக்கொடுக்கப்பட்டது.

கடற்தொழிலாளர்கள் பல தடவை இலங்கை அரசால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதான இடம் வகித்தாலும் அவரைக் காப்பாற்றவே தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டனர்.

கிராம எழுச்சி திட்ட நிதியை சட்டைப் பைக்குள்ளே போட்டுக்கொண்டு தமிழ்த் தரப்பு பிரதிநிதிகள் அவர்களுக்கு ஆதரவளித்த நிலையே காணப்பட்டது‘‘ என்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US