சமூகத்துக்குள் டெல்டா பரவுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை - இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம்
கோவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு, சமூகத்துக்குள் பரவுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடுவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே இந்த டெல்டா மாறுபாட்டுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
எனினும் டெல்டா மாறுபாடு ஏனைய பகுதிகளிலும் பரவுகிறது என்ற அச்சம் நிலவுகிறதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாடு முதன்முதலில் கொழும்பு தெமட்டகொட பகுதியில் கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் டெல்டா மாறுபாடு உள்ளிட்ட கோவிட் வைரஸ் பரவாமல் தடுக்க பொது மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று ரஞ்சித் படுவந்துடுவ கூறியுள்ளார்.
கோவிட் வைரஸின் மற்ற வகைகளை விட டெல்டா மாறுபாடு தீவிரமாகப் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan