பிரித்தானியாவில் மீண்டும் பொது முடக்கமா? பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
“இந்த குளிர்காலத்தில் நாட்டை முடக்குவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை” என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு இன்று விஜயம் செய்த பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது கோவிட் -19 பூஸ்டர் தடுப்பூசிகளை பெற தகுதியுள்ளவர்களுக்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நேற்றைய தினம் பிரித்தானியாவில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் தற்போது அதிகளவு" தொற்று இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், அதிகரித்து வரும் தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் "பி" திட்டத்தின் கீழ் - இங்கிலாந்தில் கோவிட் நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயாராக இல்லை என்றும் பிரதமர் கூறினார்.
தற்போதைய தொற்றுநோய்களின் விகிதம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்ட கணிப்புகளுடன் முழுமையாக ஒத்துப்போவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
விஞ்ஞானிகளின் ஆலோசனை புறக்கணிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறோம் எனவும், உரிய நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற முன்வர வேண்டும். பூஸ்டர்க தடுப்பூசி அற்புதமானவை, பாதுகாப்பின் அளவுகள் உண்மையில் மிக அதிகம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்கள் முழு நம்பிக்கையுடன் தங்களது தடுப்பூசிகளை பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் பாடசாலைகளில் தடுப்பூசி திட்டத்திற்கு கூடுதலாக நாளை முதல் முன்பதிவு அமைப்புகள் திறக்கப்படும்.
தற்போது கோவிட் வழக்குகள் உயரும் என்று நாங்கள் எப்போதும் எதிர்பார்த்தோம், அது நடக்கிறது.
மேலும் முதல் இரண்டு தடுப்பூசிகளின் குறைந்துவரும் செயல்திறனையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள், எனவே இப்போது உங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri