திரிபடைந்த புதிய கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை! - சந்திம ஜீவந்தர
பிரித்தானியாவின் திரிபடைந்த புதிய கோவிட் வைரஸின் தொற்றுக்கு உள்ளான நபர்களின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொற்றுக்கு உள்ள நபர்களிடம் இருந்து வேறு நபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரித்தானியாவின் இந்த வைரஸ் திரிபானது ஏனைய வைரஸ் திரிபுகளை விட 70 வீதம் பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளதன் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இதற்கு இந்த திரிபுதான் காரணமா என்பதை மரபணு பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.
எனவே, தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் மாதிரிகளை பரிசோதிப்பது முக்கியமானது.
அண்மையில் நடத்திய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட புதிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri