திரிபடைந்த புதிய கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை! - சந்திம ஜீவந்தர
பிரித்தானியாவின் திரிபடைந்த புதிய கோவிட் வைரஸின் தொற்றுக்கு உள்ளான நபர்களின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொற்றுக்கு உள்ள நபர்களிடம் இருந்து வேறு நபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரித்தானியாவின் இந்த வைரஸ் திரிபானது ஏனைய வைரஸ் திரிபுகளை விட 70 வீதம் பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளதன் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இதற்கு இந்த திரிபுதான் காரணமா என்பதை மரபணு பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.
எனவே, தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் மாதிரிகளை பரிசோதிப்பது முக்கியமானது.
அண்மையில் நடத்திய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட புதிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri