திரிபடைந்த புதிய கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை! - சந்திம ஜீவந்தர
பிரித்தானியாவின் திரிபடைந்த புதிய கோவிட் வைரஸின் தொற்றுக்கு உள்ளான நபர்களின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொற்றுக்கு உள்ள நபர்களிடம் இருந்து வேறு நபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரித்தானியாவின் இந்த வைரஸ் திரிபானது ஏனைய வைரஸ் திரிபுகளை விட 70 வீதம் பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளதன் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இதற்கு இந்த திரிபுதான் காரணமா என்பதை மரபணு பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.
எனவே, தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் மாதிரிகளை பரிசோதிப்பது முக்கியமானது.
அண்மையில் நடத்திய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட புதிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 மணி நேரம் முன்
ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம் News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam