திரிபடைந்த புதிய கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை! - சந்திம ஜீவந்தர
பிரித்தானியாவின் திரிபடைந்த புதிய கோவிட் வைரஸின் தொற்றுக்கு உள்ளான நபர்களின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொற்றுக்கு உள்ள நபர்களிடம் இருந்து வேறு நபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரித்தானியாவின் இந்த வைரஸ் திரிபானது ஏனைய வைரஸ் திரிபுகளை விட 70 வீதம் பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளதன் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இதற்கு இந்த திரிபுதான் காரணமா என்பதை மரபணு பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.
எனவே, தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் மாதிரிகளை பரிசோதிப்பது முக்கியமானது.
அண்மையில் நடத்திய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட புதிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
