கொழும்பில் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள தெமட்டகொட!
தெமட்டகொட பகுதியில் அதிகளவான கோவிட் டெல்டா திரிபு தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ருவான் விஜயமுனி இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பின் மொத்த சனத்தொகையில் 30 வீதமானவர்களுக்கு கோவிட் டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 30 வீதமானவர்களுக்கு சில வேளைகளில் டெல்டா தொற்று உறுதியாகியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த கொழும்பு நகரிலும் இந்த நோய்த் தொற்று பரவவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
