நாட்டின் பொருளாதார சீரழிவு! நான்கு மாதங்களில் 1000 கொள்ளை சம்பவங்கள்
1000 கொள்ளைச் சம்பவங்கள்
நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் சுமார் 1000 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
2021ஆம் ஆண்டு முழுவதும் 14ஆயிரத்து 312 கொள்ளைகள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்றன.
எனினும் 2022 முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், 4ஆயிரத்து 853 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 2,224 வீடு உடைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வழிப்பறிக் கொள்ளைகள்
அத்துடன் கடந்த நான்கு மாதங்களில் 948 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதுடன் மட்டுமல்லாமல் நாட்டில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, வீடு உடைப்பு போன்றவை வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டை விட திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸாரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
திருட்டு சம்பவங்களின்போது 50 கோடிக்கு மேல் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டன.

போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam