நாட்டின் பொருளாதார சீரழிவு! நான்கு மாதங்களில் 1000 கொள்ளை சம்பவங்கள்
1000 கொள்ளைச் சம்பவங்கள்
நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் சுமார் 1000 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
2021ஆம் ஆண்டு முழுவதும் 14ஆயிரத்து 312 கொள்ளைகள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்றன.
எனினும் 2022 முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், 4ஆயிரத்து 853 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 2,224 வீடு உடைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வழிப்பறிக் கொள்ளைகள்
அத்துடன் கடந்த நான்கு மாதங்களில் 948 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதுடன் மட்டுமல்லாமல் நாட்டில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, வீடு உடைப்பு போன்றவை வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டை விட திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸாரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
திருட்டு சம்பவங்களின்போது 50 கோடிக்கு மேல் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டன.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 4 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri