EPDPயினரின் கொலைப் பட்டியலை அம்பலப்படுத்திய இளைஞர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கொலையாளிகள் இன்னும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(06.04.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மதனராஜன், நெப்போலியன், சேதுபதி மற்றும் கருணாகரமூர்த்தி ஆகிய நான்கு பெரும் நீதிமன்றத்திற்கும் சமூகமளித்தனர். மதனராஜன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நாட்டை விட்டும் தப்பியோடினர்.
நீதிபதி இளஞ்செழியன் இவர்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கியும் இவர்கள் பிடிபடவில்லை.
அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு யாழ். நீதிமன்றம் தப்பியோடியவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதன் பின்னர் 3 ஜனாதிபதிகள் மாறியும் இன்னும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam