இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்!
இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் தொகுதி துபாய் நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
குறித்த இரத்தினக்கல் தொகுதி 510 கிலோகிராம் எடையுள்ள அரனுல் கற்களின் பெரிய கொத்து ஆகும்.
இந்த கல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியதால், இரத்தினங்கள் துறையின் வல்லுநர்கள் அதன் மதிப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் அதற்கு மதிப்பில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்தப் பின்னணியில் குறித்த கல் இன்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. துபாய்க்கு கொண்டுசெல்லும் நோக்கில் குறித்த கல்கொண்டுவரப்பட்டது. துபாயில் நடைபெறவுள்ள மாணிக்கக் கண்காட்சிக்காக இந்த மாணிக்கக் கொத்து வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
