பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அறவழி போராட்டத்தை உலகம் உறுதி செய்ய வேண்டும்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அறவழி போராட்டத்தினை புறநானூற்று போராட்டமாக மாறுவதற்குள் உலகம் தமிழீழத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எங்களுடைய தமிழ் தேசியத்தை,நிலத்தை யாருக்கும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.எங்களுடைய இனத்தை அழிக்க நினைப்பவர்கள், அழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த பேரணி சிறந்தவொரு பாடம் புகட்டும்.மரண அடியாகவே இருக்கும்.
தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தாயகத்தில் பேரெழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அறவழியில் நிற்கும் தமிழினத்தினை ஐ.நா மற்றும் சிங்கள அரசு இனியாவது புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam