கொவிட் மாறுபாடினால் முழு இலங்கையும் ஆபத்தான கட்டத்தில்...
இலங்கையில் ஏற்பட கூடிய கொவிட் மாறுபாடு காரணமாக பாரிய ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய அதற்கு தயாராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு கொவிட் மாறுபாடுகளினால் ஏற்படவுள்ள பாரிய ஆபத்துக்கள் குறித்து அவதானமாக செலுத்தி அரசாங்கம் செயற்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள கொவிட் மரபணு அல்லது மாறுபாடடைந்த மரபணு போன்றவற்றை அரசாங்கம், சுகாதார பிரிவு மற்றும் மக்கள் இணைந்து உரிய முறையில் செயற்படுவதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் சட்டங்களை செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் பின்வாங்கினால் டெல்டா முதலாம் இடத்திற்கு வரும். எப்படியிருப்பினும் அதனை விடவும் மோசமான மாறுபாடு நாட்டில் பரவுவதனை நிறுத்த முடியாமல் போய்விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
