சிங்கப்பூரில் கூரிய ஆயுதத்துடன் வீதியில் திரிந்த நபர்! - இலங்கையரின் துணிகரச் செயல் (Video)
சிங்கப்பூரில் கூரிய ஆயுதத்துடன் வீதியில் பொதுமக்களுக்கு ஆபத்தான வகையில் செயற்பட்ட நபர் ஒருவரை இலங்கையர் ஒருவர் துணிச்சலுடன் செயற்பட்டு பிடித்துள்ளார்.
சிங்கப்பூரின் புவாங்காக் வட்டரத்தில் நேற்றைய தினம் கூரிய வாளுடன் வீதியில் செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக நபர் செயற்பட்டார். இதன்போது சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையரான அமில சிந்தன, அந்த நபரை துணிச்சலுடன் செயற்பட்டு பிடித்துள்ளார்.
இது குறித்த காணொளிகள் அந்த பகுதியில் இருந்த கெமராவில் பதிவாகியுள்ளது. கூரிய ஆயுதம் வைத்திருந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் சந்தேகநகரை கைது செய்திருந்தனர்.
அமில சிந்தனவின் செயற்பாட்டிற்கு சிங்கப்பூர் காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு சந்தேகநபருக்கு எதிரான நாளைய தினம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri