இலங்கையின் மின் துண்டிப்பைக் கூட இனி அமெரிக்காவே தீர்மானிக்கும்! ஜே.சி.அலவத்துவல
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் பிரதானமானது வளங்களை பாதுகாப்பதாகும். குறிப்பாக பிரதமர் மஹிந்தவின் ஆட்சி காலத்தில் ஷங்ரிலா ஹோட்டலுக்கு வழங்கிய இராணுவ தலைமையகத்தின் இடத்தையும் மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்ற தோற்றப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஆட்சிக்கு வரும் முன்னர் மக்களிடம் தோற்றுவித்த நிலையில், இன்று இரண்டு வருடங்கள் செல்லும் முன்னர், எல்லாம் தலைகீழாக மாறியுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல(J.C.Alawathuwala) தெரிவித்தார்.
“இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் ஸ்ரீலங்காவிற்கு வருவதற்கு முன்னர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் திருகோணமலைக்கு சென்று விட்டதாக நாம் அறிந்தோம். எனவே, இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயமானது, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை பெறுவதற்கும் ஐ.ஓ.சி எரிபொருள் நிறுவன ஒப்பந்தத்தை நீடிப்பதற்காகவுமே அமைந்துள்ளது“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதனால்தான் இந்திய வெளிவிவகார செயலாளர் நேரடியாக திருகோணமலைக்கு எண்ணெய் தாங்கிகளை கண்காணிக்க விஜயம் செய்துள்ளார் .
எனவே யுகதனவி மின்சக்தி ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கியதால், எமது நாட்டில் மின்துண்டிப்பை கூட அமெரிக்க அரசாங்கமே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேப்போல் தான் எரிபொருளின் ஏகபோக உரிமையும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகவே, ராஜபக்ச குடும்ப நிறுவனம் இந்த நாட்டை ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நாடுகளுக்கும் எமது நாட்டு வளங்களின் ஏகபோக உரிமையை வழங்கினால், எமது குழந்தைகளின் எதிர்காலம் அல்லது எமது நாட்டின் எதிர்காலம் என்னவாகும்“ எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
