வெளிநாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் வசமாக சிக்கினர்
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எஹலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
எஹலியகொட பொலிஸ் பிரிவு கொடகம்பொல பரக்கடுவ பிரதேசத்தில் இராஜகிரிய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொடகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லெல்ல பிரதேசத்தில், இரத்தினபுரி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்லெல்ல, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபரே இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri