கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை மீட்ட அதிரடிப்படையினர்
பதுளை லுணுகல பொலிஸ் பிரிவின் உடகிருவ வனப்பகுதி மற்றும் உடுகிருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான சிறுமியை சந்தேக நபர்கள் கடத்திச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 மற்றும் 53 வயதான நபர்களே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் லுணுகல மற்றும் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுணுகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக லுணுகல சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி சந்தேக நபர்கள் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து லுணுகல பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய பசறை மற்றும் லுணுகல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக தேடுதலை நடத்தி சிறுமியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam