தேசிய மக்கள் சக்தியின் நகர்வு! குற்றம் சுமத்தும் தமிழர் தரப்பு
நாங்கள் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் எனவும், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் இதனை செய்ய மாட்டார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஈரளகுளம் குதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கங்கள்
”தேசிய அரசாங்கங்கள் மாறுபடும் என்பது உண்மை. தற்போது ஆட்சிக்கு வந்து இருக்கும் அரசாங்கம் கூட எதிர்காலத்தில் மாறலாம்.
ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.

அதேபோல் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எந்த நல்ல அபிப்பிராயங்களும் இல்லை என்பது உண்மை.
தேசிய மக்கள் சக்தியில் தலைமைப் பீடத்தின் கதையை கேட்டே அவர்கள் செயற்பட வேண்டும் என்று ஓர் நிலைப்பாடு உள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் குரலாய், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது போராட்டங்கள் மூலமும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க எம்மாலே முடியும்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam