முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்
தலிபான் அமைப்பின் உயர் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா முதல்முறையாக நேற்று பொது வெளியில் தோன்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தலிபான் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் இதுவரை அவர் பொதுவெளியில் தலைகாட்டாத நிலையில்,அவர் இறந்துவிட்டதாகவும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு சென்றதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவரது வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், புகைப்படம்,காணொளி என்பனவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட காணொளியினை தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்போது தலைவராக இருந்த முல்லா அக்கர் மன்சூர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அகுந்த்சாதா தலிபான் இயக்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.