ஹிருனிகாவை கைது செய்யுமாறு பிடிவிராந்து பிறப்பிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதாக ஹிருனிகா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றில் ஹிருனிகா வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை ஹிருனிகா உள்ளிட்ட சிலர் கடத்திச் சென்று தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam