தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 19வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் (Photos)
தமிழ்நாடு - திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்று 19வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து திருச்சி அரச மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் நேற்றிரவு முதல் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உடல்நிலை பாதிப்புற்ற நிலையிலும் தொடரும் போராட்டம்
எனினும் அவர்கள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில் இதுவரை தமிழக முதலமைச்சர் சார்பாகவோ அல்லது அரச அதிகாரிகள் சார்பாகவோ போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று 19வது நாளாகப் போராட்டம் தொடர்வதால் அவர்களின் உறவுகள் மிகுந்த கவலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
