ஐ.நா மனித உரிமைகளை ஆணையர் வெளியிட்ட காட்டமான அறிக்கை! தமது முடிவை அறிவித்தது இலங்கை அரசு
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வு இடம்பெற்று வரும் நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்செல்டினால் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை அரசாங்கம் இன்று தனது முடிவை அறிவித்துள்ளது.
இது குறித்து ஜெனிவா அமர்வில் இன்று பேசிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கை ஐ.நா. சாசனத்தின் 2(7) ஐ முழுமையாக மீறும் செயல் என்றும் புலிகளின் அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.
குறித்த அறிக்கை ஐ.நா. சாசனத்தின் 2(7) ஐ முழுமையாக மீறும் செயல் என்றும் புலிகளின் அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் என்றும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்தும் பேசிய அவர்,