இங்கிலாந்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் கடத்தப்பட்டதாக தெரிவித்து காலி உனவடுன பிரதேசத்தில் தந்தையொருவர் விடுத்த வேண்டுகோள் குறித்து அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தொடர்பில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பத்து வருடங்களாக தீவிரவாத கும்பலால் சிறைபிடிக்கப்பட்ட எனது மகளை விடுதலை செய்” என்ற வாசகம் அடங்கிய வான் ஒன்று தென்னிலங்கையில் சுற்றித் திரிகிறது.
காலியில் வாழும் சேனக சொய்சாஎன்பவர் தனது மகளை தேடும் முயற்சியில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
குறித்த வாகனத்தில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள யுவதியின் தந்தையான சேனக சொய்சா இந்த வாகனத்தை ஓட்டிச் செல்வதுடன், தனது மகளைத் தேடித் தருமாறு தினந்தோறும் பரவலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
2012ம் ஆண்டில், அவரது பத்து வயது மகள் இங்கிலாந்தில் தேசிய குற்றவியல் முகவரம் என்ற பயங்கரவாதக் குழுவால் கடத்தப்பட்டதாகவும், தனது மகளை தன்னிடம் திருப்பித் தர ஏற்பாடு செய்யுமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும், கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இங்கிலாந்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று இந்த பெண்ணை தொடர்புகொண்டு கேட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அவர் தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இங்கிலாந்தில் தனது தாயுடன் நேரத்தை செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்... இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி News Lankasri

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்... காணச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan
