அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமை மிகவும் மோசமடையும்! - இராணுவத் தளபதி எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தரவுகளின் அறிவியல் விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், இதற்கான பொறுப்பை மக்களே ஏற்க வேண்டும். அத்துடன் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,017ஆக அதிகரித்துள்ளது. நேற்றும் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், டிசம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,000 ஆக இருக்கும் என வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
