தாயால் கைவிடப்பட்ட சிறுமிகளின் பரிதாப நிலைமை - பொலிஸார் செய்த உதவி
மெதிரிகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 9 வயது எனவும் இன்னொருவருக்கு 5 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமிகளின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் கணவனையும் குழந்தைகளையும் கைவிட்டுச் சென்றுள்ளார். அன்று முதல் இந்த சிறுமிகள் தந்தையின் பொறுப்பில் வளர்ந்து வருகின்றனர்.
சிறுமிகளை மீட்ட பொலிஸார்
உடல்நிலை சரியில்லாத பாட்டியும் இந்த வீட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த பாட்டியை பராமரிக்கும் செயற்பாடுகளை குறித்த சிறுமிகளே மேற்கொண்டு வந்துள்ளனர்.
சிறுமிகள் தங்கியிருந்த வீடு மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும், சிறுமிகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கிராம மக்கள் குழந்தைகள் நல ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற நிலையில் சிறுமிகள்
இந்த நிலையில் பொலிஸார் வீட்டிற்கு வந்தபோது சிறுமிகள் பாதுகாப்பின்றி அந்த இடத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது.
உணவின்றி இருந்த சிறுமிகளுக்கும் உணவு வழங்க பொலிஸார் ஏற்பாடு செய்ததுடன், உடைகள், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை வழங்க பொலிஸ் அதிகாரிகள் குழு ஏற்பாடு செய்தது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
