திடீரென தியாகிகளாக மாறிய இலங்கை அரசியல்வாதிகள்
இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தனது ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்காக நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதற்கமைய தனக்கு கிடைக்கவுள்ள ஒகஸ்ட் மாத சம்பளத்தை முழுமையாக கொவிட் நிதியத்திற்கு வழங்கி விடுமாறு அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.
எதிர்கட்சி தலைவர் ஆரம்பிக்கவுள்ள விசேட நிதியத்திற்கு தங்கள் ஒருமாத கால சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தனது சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுஸ நாணயக்கார முஜிபூர் ரஹ்மான் ஆகியோரும் தங்கள் ஒருமாத சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளனர்.
