நாட்டை ஆளுபவர்கள் நேர்மை இல்லாதோர் - கொந்தளித்த தேரர்
பாரத லக்ஸமன் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியானா துமிந்த சில்வாவிற்கு நம் நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டணை வழங்கி சிறைக்கு அனுப்பியது.முறையாக அனைவரும் விசாரிக்கப்பட்டு, கிடைத்த அனைத்து ஆதாரங்களையும், தகுந்த சாட்சிகளையும் வைத்தே நீதிமன்றால் இந்த முடிவு இறுதியாக எடுக்கப்பட்டது.
எமக்கு தெரியும் பெளத்தம், கிறிஸ்தவம், இந்து, முஸ்லீம் என அனைத்து மதங்களிலும் கொலை செய்வது பற்றிய கருத்து பொதுவான ஒன்றாகவே காணப்படுகின்றது.
நாங்கள் தெரிந்தே ஒரு கொலையை செய்தால் அது மிகப்பெரிய பாவம். இதுவே அனைத்து மதத்தினதும் பொதுவான கருத்து.
அதையே தான் சட்டமும் பார்க்கின்றது. அதைவைத்து தான் பாரத லக்ஷ்மான் உட்பட மற்றும் அவரோடிருத்த ஏனையோரையும் துமிந்த சில்வா தெரிந்தே, வேண்டுமென்றே கொலை செய்தார் என்று முடிவுக்கு வந்து இறுதி தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கியது என தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,