நீண்ட நாள் வார விடுமுறையில் ஒன்றுகூடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
நீண்ட நாள் வார விடுமுறையின் போது பல்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்த மற்றும் மக்கள் பெருமளவு கூடிய இடங்களில் இருந்தவர்களுக்கு காய்ச்சல் அல்லது சுவாசம் தொடர்பிலான நோய் நிலைமை அவதானிக்கப்படும் பட்சத்தில் விரைவில் வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கான ஒட்சிஜன் தேவையில் சிறிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை சுகாதார கட்டமைப்பிற்கு அழுத்தமாக இல்லாத போதிலும் இந்த நிலை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட வார விடுமுறையில் இலங்கையிலுள்ள தேசிய பூங்காக்களுக்கு 70,000க்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri