புதுக்குடியிருப்பில் கோவிட் தொற்று தொடரும் அபாயம்
புதுக்குடியிருப்பு நகர் அண்மித்த பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கடந்த 20 ஆம் திகதி கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புபட்ட 25 பேருக்கு மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
குறித்த 9 பேர்களில் ஒருவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருடன் பணியாற்றிய 16 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.