தெற்கு மக்கள் மத்தியில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் செயற்பாடு
தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில செயற்பாடுகள் தெற்கு மக்கள் மத்தியில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கு வாழ் மக்கள்
“வடக்கு கிழக்கு வாழ் மக்களுடைய எதிர்காலத்தை குறித்து பாரிய பொறுப்பு எனக்கும் எனது கட்சி இலங்கை தமிழரசு கட்சிக்கும் இருக்கின்றது.
அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள்.
கடந்த காலங்களிலும் கூட தை பிறந்தால் எமது தமிழ் மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்கின்றதன் அடிப்படையில் நாங்கள் அரசியலில் ஈடுபட்டோம்.
அரசியல் தீர்வு விடயம்
எங்களுடைய அரசியல் தீர்வு விடயம் மற்றும் எமது மக்களின் அடிப்படை போன்ற விடயங்களில் நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.
சில விடயங்களை நாங்கள் கடந்த காலத்தில் அடையக் கூடியதாக இருந்தது. சில விடயங்களை முழுமையாக திருப்தி அடையக்கூடிய நிலையில் காணப்படவில்லை. சில விடயங்களில் சில முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுத்திருந்தோம்.
இந்த நாட்டிலே தமிழ் மக்களும் ஒரு மக்கள் என்ற அங்கீகாரத்துடனும், எங்களுடைய சகல அதிகாரங்களுடனும் வாழ வேண்டும் என்பதற்கான அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குகின்ற பணியில் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் நோக்கோடு செயற்படுவோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
