அரசாங்கம் மறைத்து வைத்த அறிக்கையை அம்பலப்படுத்தியுள்ளேன்! சர்ச்சையை கிளப்பிய முஜிபுர்
ஸ்கேன் செய்யாமல் கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானால் இன்று (30) நாடாளுமன்றத்தில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கையை அரசாங்கம் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் மறைத்து வைத்திருப்பதாகவும், முஜிபுர் ரகுமானால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழு அறிக்கை
இதன் காரணமாக இந்தக் குழு அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆபத்து வகைப்பாட்டின் கீழ் கட்டாய ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தவேண்டிய 'சிவப்பு லேபிளின்' கீழ் காணப்பட்ட 151 கொள்கலன்களில், 37 கொள்கலன்கள் எந்த ஸ்கேனிங்கிற்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.