கைதுப் பட்டியலில் ஷிரந்தி! மகிந்த குடும்பம் வகுக்கும் புது வியூகம் - நாமல் புலம்பல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்களை கைது செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்குமாறு மல்வத்த மகாநாயக்க தேரரிடம் கெஞ்சுவதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், மதத் தலைவர்கள் மீது அரசியல் சேறு பூசும் முயற்சி இது என்று கூறியுள்ளார்.
மகா சங்கத்தினருக்கு செய்யும் அவமரியாதை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மகாநாயக்க தேரர்களின் உதவியை நாடுகிறார் என்ற பொய்யான அறிக்கைகளைப் பரப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
බලයට පත් වී පළමු වසර තුළ දුන් පොරොන්දු ඉටු කිරීමට අපොහොසත් වූ ආණ්ඩුව, දැන් තම අසාර්ථකත්වයන් වසා ගැනීමට මංමුලා වූවන් ලෙස අසත්ය ප්රචාරය කරමින් එය වසා ගැනීමේ උත්සාහයක නියැලී සිටියි. හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා තම පවුලේ සාමාජිකයන් අත්අඩංගුවට ගැනීම වැළැක්වීම සඳහා මහානායක…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 29, 2025
இது மதிப்பிற்குரிய மகா சங்கத்தினருக்கு செய்யும் கடுமையான அவமரியாதை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக அரசாங்கம் பொலிஸ் மற்றும் நீதித்துறையை கூட அரசியல்மயமாக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து அரசியல் விசாரணைகளை அச்சமின்றி எதிர்கொண்டுள்ளோம்.
நாட்டின் நீதித்துறை அமைப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அதன்படி, தேசிய மக்கள் சக்தி தனது திறமையின்மை சட்டத்தை அரசியல்மயமாக்குதல் மூலம் மறைக்க முயற்சிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |