மங்கள சமரவீரவின் அஸ்தி புதைக்கப்பட்டது!- சந்திரிக்காவின் உருக்கமான பதிவு
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று காலை அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “அன்புள்ள மங்கள, சிறந்த இலங்கையை கட்டியெழுப்ப நடக்கும் ஒவ்வொரு போரிலும் நீங்கள் நிச்சயமாக வாழ்வீர்கள்.
அநீதிக்கும், ஊழலுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக நிற்கும் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.