அசாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியிட்ட அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
ஆரம்ப விசாரணையின்படி, மாவனெல்லாவில் புத்தர் சிலைகளை அழிப்பதற்கும் தாக்குதல் நடத்துவதற்கும் சாலிக்கு வெளிப்படையான அல்லது மறைமுகமான தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஷரியா சட்டம் குறித்து அஸாத் சாலி சமீபத்தில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் இலங்கை நாட்டின் சட்டத்தை மதிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தர். இந்நிலையில் இதுபோன்ற அறிக்கை மத தீவிரவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam
