எரிவாயுவிற்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற பொதுமக்கள் (Photos)
பருத்தித்துறையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம், எரிவாயு வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் மிக நீண்ட வரிசையில் எரிவாயு பெற்றுக் கொள்ள மக்கள் பல மணி நேரமாக காத்திருந்தும் எரிவாயு வராததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
வதந்தியை நம்பி விநியோகம் இடம்பெறும் என ஏதிர்பார்த்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுகூடிய நிலையில் காத்திருந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
எரிவாயு வராது என பருத்தித்துறை பொலிஸார் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நேற்று காலை 08 மணியளவிலிருந்து ஒருமணி வரை இவ்வாறு மக்கள் காத்திருந்தனர்.
ஏரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு அதிகளவான சிறுவர்களும் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.