இருளில் மூழ்கும் இலங்கை! மெழுகுவர்த்தியின் விலையும் சடுதியாக அதிகரிப்பு
நாட்டில் மெழுகுவர்த்திகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளதுடன், மெழுகுவர்த்தியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியல் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இவ்வாறு மெழுகுவர்த்திகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மெழுகுவர்த்தியின் மொத்த விலை ரூ.7.50 ஆகவும், சாதாரண அளவு மெழுகுவர்த்தி ரூ.37.50 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
சாதாரணமாக 40 மெழுகுவர்த்திகள் காணப்படும் பக்கெற்றுக்கள் ஒரு மாதத்துக்குள் சுமார் ரூ.100 வரை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மெழுகுவர்த்தியை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு மெழுகுவர்த்தி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam