அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள ஜனாதிபதி! ஹரீன் பெர்னாண்டோ தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைத்து துறைகளிலும் தோல்விடைந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் ஹரீன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு அவர் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைகள் குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டமை ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் தலைமையிலான இந்த செயலணி அடுத்த ஆண்டு தமது முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri