சர்ச்சைக்குரிய அமைச்சரை உடன் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டபாய உத்தரவு
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனத்தில் வைத்து ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இராஜாங்க அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு இதுவரை வெளியிடப்படவில்லை.
நேற்றிரவு (02) தனது மகனை ராகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாக, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ டுபாயிலிருந்து எத்தனோல் வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட முனையத்திற்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் விசேட விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan