கோட்டாபயவிற்கு இருந்த வாய்ப்பு! ரணிலுக்கு இல்லாத அதிகாரம்
அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு புதிய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை.
ரணிலுக்கு அதிகாரம் இல்லை
அரசியலமைப்பின் 40 சரத்தின் உப பிரிவுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே இரண்டாவது முறையாக போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இந்த வருடம் நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும். ஆனால், அடுத்த ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை.
எனவே, 2024 ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
