வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்கும் நாடாக மாறும் இலங்கை! ரணிலின் திட்டம் குறித்து வெளிப்படுத்தும் அரசியல்வாதி
இதுவே இலங்கையின் கடைசி வாய்ப்பு, நல்ல வேளையாக, சர்வதேச விவகாரங்களைக் கையாளக்கூடிய ஒரு தலைவர் இலங்கையில் இருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய கடனை அடைத்து வெளிநாடுகளுக்கு கடன் வழங்கக்கூடிய நாடாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
இதுவே இலங்கையின் கடைசி வாய்ப்பு

கடன் வாங்கும் போது, அந்த கடனை சரியாக பயன்படுத்தினால், கடனில்லா நாடாக மாற்றலாம். எனவேதான் அவருக்கு நீண்ட கால அவகாசம் வழங்கினால் இந்த நாட்டின் கடனை அடைத்து கடன் கொடுக்கும் நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு தேசிய தலைமை உள்ளது. அந்தத் தேசியத் தலைமையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு முன்னேற வேண்டும்.
எந்த அமைப்பையும் கைவிடாமல் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இதுவே இலங்கையின் கடைசி வாய்ப்பு. நல்ல வேளையாக, சர்வதேச விவகாரங்களைக் கையாளக்கூடிய ஒரு தலைவர் இலங்கையில் இருந்தார். அவரால் தேசம் பயன்பெற வேண்டும் என குறிப்பிட்டு்ளளார்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri