ஜனாதிபதி தனது அதிகாரத்தின் இறுதிக்காலத்தில் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கலாம்: திலங்க சுமதிபால
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் மட்டுமல்லாது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்திலும் நாட்டில் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டுமாயின், அந்த காலத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு மேற்படி முன்னாள் ஜனாதிபதிகளும் குற்றவாளிகளாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின் தற்போதைய நடத்த, அவரது அதிகாரத்தின் இறுதிக்காலத்தில் அவருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
