நிதியமைச்சர் பசிலுக்கு பொறுப்புகளை வழங்கிய ஜனாதிபதி
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு புறப்பட்டுச் செல்லும் முன்னர் நிதியமைச்சர் உட்பட அமைச்சரவைக்கு பொறுப்புகளை வழங்கி விட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு சென்றுள்ளதுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது இத்தாலியில் இருந்து வருகிறார்.