அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தியில் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்து கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலி சப்றி ஆற்றிய உரை கடுமையாக சாடியுள்ள ஜனாதிபதி
வெளிவிவகார அமைச்சர், பேரவையின் கூட்டத் தொடரில் ஆற்றிய உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன் ஒட்டு மொத்தமாக அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
அலி சப்ரி பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்

இந்த நிலையில், அலி சப்ரியை தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சர் பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என இதன்போது பேசப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அலி சப்ரிக்கு வேறு ஒரு அமைச்சு பதவி வழங்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam