நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,399 ஆக இருந்தது. தற்போது 14,419 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,கோவிட் தொற்றினால் மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 565,979 ஆக அதிகரித்துள்ளது.