போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு தாக்கல்
துறைமுக நகரமான “போர்ட் சிட்டி” பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன மற்றும் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இந்த மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
“போர்ட் சிட்டி” பொருளாதார ஆணைக்குழு யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.
இந்தநிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டால் “போர்ட் சிட்டி”. இலங்கையின் பிரதேசசபை மற்றும் நகரசபைக்கு உட்படாமல் இலங்கையின் ஜனாதிபதி அமைக்கவுள்ள ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும்.
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விசேட நீதி மற்றும் நிதி அதிகாரங்கள்
வழங்கப்படவுள்ளமையால், போர்ட் சிட்டி எதிர்காலத்தில் சீனாவின் குடியிருப்பு
பகுதியாக மாறிவிடும் என்று ஜேவிபி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமை
இங்கு குறிப்பிடத்தக்கது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam