ஹிசாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்த பொலிஸ் அதிகாரி! விரைவில் கைது?
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமி ஹிசாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சிறுமியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ரிசாட் பதியுதீனின் மாமனார், குறித்த குறித்த பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பெடுத்து கூறியதாகவும் அதன்பின் பதியுதீன் வீட்டுக்குச் சென்ற அவர் சிறுமியின் பெற்றோருக்கு 50000 ரூபா பணம் வாங்கித் தருவதாகவும் இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்னர் ரிசாட் பதியுதீனின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியதாகவும் அவரது தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
