மனித பாவனைக்கு தகுதியற்ற 15 கோடி பெறுமதியான பாண்தூள் மூட்டைகள் கண்டுபிடிப்பு
கனேவல்பொல பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கோடி பெறுமதியான பாண் தூள் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிரவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பாண் தூள் பொதிகள் மனித பாவனைக்கு தகுதியற்றவை எனவும், அவை சந்தையில் வெளியிட தயாராக இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மிகப் பெரிய கிடங்கில் இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், 25 மற்றும் 50 கிலோ எடையுள்ள 10,000க்கும் மேற்பட்ட பாண் தூள் மூட்டைகளில் இருந்ததாகவும் சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாண் தூள் பொதி கையிருப்பு
கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாண் தூள் பொதி கையிருப்பு காலாவதியாகவுள்ளதுடன், இது வெளிநாட்டில் தயாரிக்கப்படுவதாகவும் பொதியிடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போர்வையில் மீண்டும் சந்தையில் மறுவிநியோகம் செய்யப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam