மின்னல் தாக்கியதில் சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
குருநாகல் மாவட்டம், மஹவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுமி ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார் எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பன்வௌ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை நிலவி வந்த நிலையில், சிறுமி தனது வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்.
எரிகாயங்களுடன் நாகொல்லாகம வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது சிறுமி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக நாகொல்லாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம்
வைக்கப்பட்டுள்ளது.