உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை வெளிநாடு கொண்டு செல்ல விமானம் தயார்
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல்லை சீனாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின், ஷென்காய் நகரத்தில் இடம்பெறவுள்ள இரத்தினக் கல் ஏலத்தில் விற்பனை செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
குறித்த நீலக்கல்லை கொண்டு செல்வதற்காக தனியாக ஒரு விமானம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பயணத்தில் 25 இரத்தினகல் வர்த்தகர்களும் இணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தானும் அதற்குரிய இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் சீனா செல்லவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நீலக்கல்லின் உரிமையாளரின் விருப்பத்திற்கமைய விரைவில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இந்த நீலக்கல்லின் பெறுமதியை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நீலநிற மாணிக்ககல் தொடர்பில் உலகின் பல நாடுகளும் அவதானத்தை செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
