என் குடும்பத்தை சித்திரவதை செய்ய வேண்டாம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர், லோவலோரன்ஸ் பகுதியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்றைய தினம் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான திருக்கேதீஸ்வரன் (சங்கர்) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது வீட்டில் இருந்து 150 மீற்றர் தொலைவில் உள்ள பலா மரமொன்றிலேயே அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் இவர் இருந்ததை அவதானித்த அயல் வீட்டார் வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அதிகாலை மூன்று மணியளவில் மாடு பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவரின் சட்டை பையில் இருந்து எனது மரணத்தை நானாகவே தேடிக்கொண்டேன். எனது குடும்பத்தினரை யாரும் துன்புறுத்த வேண்டாம் எனது சுய சிந்தனையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று எழுதிய கடிதமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடன் சுமையே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரி தனலக்ஷ்மி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
