கோவிட் தொற்றால் தாய் மரணம்! தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தொற்றுடன் யாழிற்கு சென்ற மகன்
வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், குறித்த தாயுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது மகன் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி வீட்டில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக பொது சுகாதாரப்பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கோவில்குளம், 5 ஆம் ஒழுங்கையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தாய் (வயது 73) மற்றும் மகன் (வயது 20) ஆகியோர் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் , தாய்க்கு நோய் தாக்கம் அதிகரித்தமையால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.
தாய் மரணமடைந்த தகவலை தெரியப்படுத்தி, குடும்பத்தினரை தகனக் கிரியைக்கு அழைப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் அவர்களது தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மகன் வீட்டில் இருக்கவில்லை.
இது தொடர்பில் வீட்டில் இருந்த அவர்களது உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள், தனிமைப்படுத்தல் சட்ட விதி முறைகளை மீறி செயற்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக வவுனியா பொலிஸார் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan