சிறுவர் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களோடு கட்சி தொடர்பு பேணாது – எரான் விக்ரமரட்ன
சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுடன் தமது கட்சி தொடர்பு பேணாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை கடத்துதல், சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புபட்டதாக நிரூபிக்கப்படும் குற்றவாளிகளுடன் தமது கட்சி தொடர்பு பேணாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான அனைத்து விதமான துன்புறுத்தல்களையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் நாடாளுமன்றில் தமது கட்சி இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும் பொது இணக்கப்பாட்டை மீறும் தரப்புகளுடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் இல்லத்தில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சட்ட ரீதியான நிரூபிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
