கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனிதாபிமானச் செயல்! இலவசமாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்
நாட்டில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், கறுப்புச் சந்தையில் எரிபொருள் அதிக விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலைகள் காரணமாக பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கும், பாதிப்புக்கும் முகம்கொடுத்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்துள்ளார்.
இலவசமாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்

மஹரகம - தெஹிவளை வீதியில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் உள்ள ஹைவே எண்டர்பிரைசஸ் என்ற எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இவ்வாறு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மக்களின் இன்னல்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மண்ணெண்ணெய் பெறுவதற்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பெருமளவானவர்கள் குவிந்தனர்.
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam